ட்ரெண்டிங்

தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

 

அதன்படி, தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கர்லால் குமாவத் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.

 

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அவ்வப்போது காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வரும் சூழலில், அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, இந்த உத்தரவை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.