ட்ரெண்டிங்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு! 

பராமரிப்பு பணிகள் காரணமாக, சேலம்- யஷ்வந்த்பூர் ரயில் சேவைகள் ஐந்து நாட்களுக்கு ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெங்களூரு ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஏப்ரல் 02- ஆம் தேதி முதல் ஏப்ரல் 06- ஆம் தேதி வரை சேலம்- யஷ்வந்த்பூர் ரயில் சேவையும், ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் ஏப்ரல் 05- ஆம் தேதி வரை யஷ்வந்த்பூர்- சேலம் ரயில் சேவையும் முழுமையாக ரத்துச் செய்யப்படுகிறது. 

இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.