ட்ரெண்டிங்

சபரிமலை சீசன்: கோட்டயம்- சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு!

 

சபரிமலைக்கு பக்தர்களின் வசதிக்காக, கோட்டயம்- சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு மார்க்கமாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் 2024 ஜனவரி 1 ஆகிய நாட்களில் இயக்கப்படும். கோட்டயத்தில் இருந்து இரவு 08.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.

 

இந்த சிறப்பு ரயில், பாலக்காடு, போத்தனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.