நோய் தாக்குதல் வெண்டைக்காய் சாகுபடி பாதிப்பு!
நோய் தாக்குதல் காரணமாக, வெண்டைக்காய் சாகுபடி பாதிப்படைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனியார் விதைப் பண்ணை மூலம் வெண்டை விதை வாங்கி, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 45,000 ரூபாய் செலவு செய்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் காரணமாகவும், அழுகல் நோய் தாக்குதல் காரணமாகவும், வெண்டைக்காய் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாக வெண்டை சாகுபடி விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.