ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை. சுற்றறிக்கையால் சர்ச்சை!

 

"சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், பணியாளர்கள் புத்தகங்களை வெளியிடக்கூடாது" என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.

 

சர்ச்சைக்கு பெயர் போன சேலம் மாவட்டம், ஓமலூர் டோல்கேட் அருகில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

 

அதில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்கள் புத்தகங்களை வெளியிடக் கூடாது; ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. இதுவரை அனுமதி பெற்று, அனுமதி பெறாமல் வெளியிட்ட புத்தகங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை வரும் பிப்ரவரி 20- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.