ட்ரெண்டிங்

தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

 

சேலம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 02- ஆம் தேதி முதல் பிப்ரவரி 29- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் மற்றும் மண்டல பயிற்சி இணை இயக்குநர், சேலம் அலுவலகத்தை நேரிலோ, 0427- 2900142 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது rjdtslm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புக் கொண்ட பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.