ட்ரெண்டிங்

அரசு மரியாதையுடன் இளைஞரின் உடல் நல்லடக்கம்!

 

சேலம் மாவட்டம், மேச்சேரியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர், மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் பெற்றோரின் ஒப்புதலுடன் தானம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

மேச்சேரியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு, திரும்பிக் கொண்டிருந்த ஏற்பட்ட சாலை விபத்தில் தினேஷ் குமார் மூளைச்சாவு அடைந்தார்.

 

இதையடுத்து, தினேஷ் குமாரின் பெற்றோர் சம்மதத்துடன், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தமிழக அரசு, சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடையும் நபர்கள் உடல் உறுப்பு தானம் வழங்கினால், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

 

அதன் அடிப்படையில், உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலுக்கு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் அரசு உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினர்.