ட்ரெண்டிங்

சுரங்கப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சேலம்- விருத்தாச்சலம் ரயில்வே கேட்டைக் கடக்க சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக மேம்பாலம் கட்ட வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த போராட்டத்தில் 300- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காட்டுக்கோட்டை முதல் வடசென்னிமலை வரை 100- க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "சுரங்கப்பாதை உள்ள பகுதி மிகவும் தாழ்வான பகுதி; மழைநீர் தேங்கக்கூடிய பகுதி. சுமார் மூன்று மாதம் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால் தான் சுரங்கப்பாதை வேண்டாம்; மேம்பாலம் அமைக்க அரசை வலியுறுத்திக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.