ட்ரெண்டிங்

உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை - பிரதமர் நரேந்திர மோடிக்கு எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கடி

பட்டாசு குடோன் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணத்தொகையை வழங்குவது தொடர்பாக, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு சேலம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், "சேலம் மாவட்டம், சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் கடந்த ஜூன் மாதம் 01- ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தீர்கள். ஆனால், தற்போது வரை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. எனவே, பட்டாசு குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிவாரணத்தொகையை விரைந்து வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.