ட்ரெண்டிங்

பிப்.16- ஆம் தேதி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

 

பி.எஸ்.என்.எல். எம்பிளாயிஸ் யூனியன் ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம், ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில், துணை பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய பேச்சுவார்த்தையை முடிவு செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு வசதிகளான இ.எஸ்.ஐ.பி.எப் உள்ளிட்ட வசதிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்த கோரிக்கைகளை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அமல்படுத்த வலியுறுத்தி வரும் பிப்ரவரி 16- ஆம் தேதி நாடு தழுவியளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த கருத்தரங்கில் சுமார் 500- க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.