ட்ரெண்டிங்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு.... பயண டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு!

வரும் ஆகஸ்ட் 29- ஆம் தேதி அன்று ஓணம் பண்டிகை (Onam Festival) கொண்டாடப்படவுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கேரளாவுக்கு செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வேயின் (Southern Railway) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டம் (முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், "ஓணம் பண்டிகையையொட்டி, ஆகஸ்ட் 29- ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கணினி மயமாக்கப்பட்டப் பயணிகள் முன்பதிவு மையங்கள் (Reservation Centres) ஒரு ஷிப்டு மட்டுமே செயல்படும். 

அதாவது, வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை பணி அட்டவணைப் பின்பற்றப்படும். அதன்படி, ஆகஸ்ட் 29- ஆம் தேதி காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மட்டுமே பயணிகளுக்கான கணினி முன்பதிவு மையங்கள் செயல்படும். 

இதனைக் கருத்தில் கொண்டு, பயணிகள் தங்களின் நேரடி பயண டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.