சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான பூபதி. கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் 23- ஆம் தேதி அன்று அதிகாலை 01.30 மணிக்கு சென்னையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் தனியாகப் புறப்பட்ட பூபதி, அன்று மாலை 06.54 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் செம்பூரை சென்றடைந்தார்.
சுமார் 1,343 கிலோ மீட்டரை குறைவான நேரத்திலும், வேகமாகவும் கடந்த பூபதி பயணம் இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனை கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் 09- ஆம் தேதி அங்கீகரித்த இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், பூபதிக்கு பதக்கம், சான்றிதழ், புத்தகத்தை வழங்கி பாராட்டியுள்ளது.