ட்ரெண்டிங்

தைப்பூசம் திருவிழா- முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்!

தைப்பூசத்தையொட்டி, பழனியாண்டவர் முருகன் கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  சுவாமி தரிசனம் செய்தார். 

தைப்பூசத்தையொட்டி, சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பழனியாண்டர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். 

எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி, மேளதாளங்களுடன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அதைத் தொடர்ந்து, முருகனுக்கு காவிரி தண்ணீர், இளநீர், மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில், எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது.