ட்ரெண்டிங்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு- கல்லூரிகளில் நடந்த சிறப்பு பூஜைகள்!

 

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள், மடாதிபதிகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி, சேலத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல், பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் ராமர், சீதை உருவப்படங்களை வைத்து பூஜை செய்தனர். 

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் ஓமலூர் ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து மாணவ, மாணவிகளும், பேராசிரியர்களும் இணைந்து நாட்டு மக்கள் நலம் பெற வேண்டியும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் சிறப்பு திருவிளக்கு பூஜைகளை நடத்தினர். மேலும் 108 ராம நாமத்தை உச்சரித்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

 

அதேபோல், சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் ராமர் மற்றும் சீதை சிலைகள் வைக்கப்பட்டு 108 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் பொங்கல், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.