ட்ரெண்டிங்

கீழே தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சோகம்!

சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியில் உள்ள வள்ளுவர் நகரில் வசித்து வருபவர் ஜெயராஜ் (வயது 70). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 03- ஆம் தேதி அன்று ஜெயராஜ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு பொருட்களை வாங்குவதற்காக, வீட்டை விட்டு வெளியே வந்த போது, கால் தவறியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

 

இதில் படுகாயமடைந்த ஜெயராஜை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், ஜெயராஜ் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.13) அதிகாலைப் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இது குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், முதியவரின் உடலை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். கீழே தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.