ட்ரெண்டிங்

லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் அப்புசாமி (வயது 48). இவரது மகன் அரவிந்த் (வயது 22) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் அரவிந்த் கல்லூரிக்கு சென்றார். பின்னர், கல்லூரி வகுப்பு முடிந்தவுடன் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

செக்கானூர் அருகே அரவிந்தின் இருசக்கர வாகனம் வந்துக் கொண்டிருந்த போது, எதிராக காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரவிந்த் தூக்கி வீசப்பட்ட நிலையில், இருசக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.

 

சாலையில் படுகாயங்களுடன் கிடந்த அரவிந்த், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.