ட்ரெண்டிங்

தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடங்கியது!

தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு சேலத்தில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு திடல் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்த கனிமொழி எம்.பி. மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதால், சேலம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.