ட்ரெண்டிங்

ஏப்.21- ல் சேலத்தில் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என உத்தரவு!

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 21- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என்பதால், மாநகர பகுதியில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மேற்கண்ட தேதியன்று தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவினை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு உத்தரவினை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.