விளையாட்டு

கைப்பந்து போட்டியில் கோப்பையை வென்ற பெரியார் பல்கலைக்கழக அணி!

 

தென்மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டியில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

 

தென்மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி என 6 மாநிலங்களைச் சேர்ந்த 50 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர்.

 

லீக் போட்டிகளின் முடிவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி மற்றும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி பல்கலைக்கழக அணி இறுதிப் போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் 26- 14 என்ற புள்ளி கணக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி, மகாத்மா காந்தி பல்கலைக்கழக அணியை வீழ்த்திக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

 

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பத்மவாணி மகளிர் கல்வி குழுமத் தலைவர் சத்தியமூர்த்தி, முதலிடம் பெற்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கினார் மகாத்மா காந்தி பல்கலைக்கழக அணி இரண்டாமிடத்தையும், கோழிக்கோடு பல்கலைக்கழக அணி மூன்றாமிடத்தையும், கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி நான்காம் இடத்தையும் பிடித்தனர்.