ட்ரெண்டிங்

ஜன.26- ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம்!


வரும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் கிராமச் சபைக் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராமச் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராமச் சபைக் கூட்டங்கள், மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கிராமச் சபைக் கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராமச் சபை செயலியில் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகள் உள்ளீடு செய்ய வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை அதிகாரிகள், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனத் அரசு தெரிவித்துள்ளது.