ட்ரெண்டிங்

திருச்சியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்!

 

பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 12- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து திருச்சிக்கும், ஜனவரி 13- ஆம் தேதி திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கும் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

மதியம் 02.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், நள்ளிரவு 11.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அதிகாலை 04.45 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், நண்பகல் 12.00 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

இந்த சிறப்பு ரயில்கள், கரூர், நாமக்கல், சேலம், பங்காரப்பெட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.