ட்ரெண்டிங்

பொங்கல் பண்டிகை: தாம்பரம்- கோவை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தாம்பரம்- கோவை இடையே சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து தாம்பரத்திற்கும், ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கோவையில் இருந்து இரவு 08.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதிகாலை 05.20 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், காலை 07.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மாலை 04.30 மணிக்கு கோவையைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.  

 

இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.