ட்ரெண்டிங்

சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.க்கு பதவி உயர்வு!

 

தமிழ்நாட்டில் 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் என 48 பேரை பணியிட மாற்றம் செய்தும், இதில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி., ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு ஐ.ஜி.பி. ஆக பதவி உயர்வு அளித்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை காவல் தலைமையகத்தில் ஏ.ஐ.ஜி.பி. ஆக இருந்த உமா, சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.