ட்ரெண்டிங்

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு- ஐந்து பேர் ஆஜர்!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு தொடர்பான ஐந்து பேர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

 

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக வர்த்தக ரீதியான நிறுவனம் தொடங்கப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி, பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணி பாரதி, துணைவேந்தரின் உதவியாளர் விஷ்ணு மூர்த்தி, அவரது மனைவி வனிதா ஆகியோர் ஐந்து பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை துணை ஆணையர் சம்மன் அனுப்பியிருந்தார்.

 

அதன் அடிப்படையில், இன்று (ஜன.04) காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர், பேராசிரியர்கள் என சம்மன் அனுப்பப்பட்டிருந்த ஐந்து பேரும் கருப்பூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.  

 

இதனிடையே, தலைமறைவான பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலுவை, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், காவல்துறையினரிடம் விளக்கம் அளித்துள்ள ஐந்து பேரின் வாக்குமூலம் அடிப்படையில், மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.s