ட்ரெண்டிங்

காவல்துறையினர் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பெற்றோர்!

 

சேலம் அருகே மதுபோதையில் இருந்த தி.மு.க. அரசுப் பள்ளியின் ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணியாற்றும் ஆசிரியை உமா என்பவரை தி.மு.க. பிரமுகர் தம்பிதுரை ஒருமையில் திட்டி வசைப்பாடியுள்ளார். அத்துடன், அந்த காட்சிகளைப் படம் பிடித்தவரிடம் இருந்து செல்போனை பிடிங்கி கீழே போட்டு உடைத்து, ஆசிரியையான உமாவைத் தாக்கியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியை காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தம்பிதுரை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், தம்பிதுரையை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இரும்பாலை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததன் பேரில், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.