ட்ரெண்டிங்

ஆதரவற்றவர்களைக் காப்பகத்தில் சேர்த்து காவல்துறையினர்!

 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் காவல்துறை சார்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரற்றோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.

 

காவல்துறை உதவி ஆய்வாளர் முரளிதரன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்ட காவல்துறையினர், தொண்டு நிறுவன நிர்வாகிகளின் உதவியோடு ஆதரவற்றவர்களை மீட்டு புத்தாடைகளை அணிவித்தனர். பின்னர், அவர்களுக்கு உணவு வழங்கிய காவல்துறையினர், அவர்களை காப்பகத்தில் சேர்த்தனர்.

 

இந்த நிகழ்வு இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.