ட்ரெண்டிங்

நாளை இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு!

 

சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (அக்.26) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அந்தந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, உடையாப்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டிதாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை (அக்.26) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம். எம்.பெருமாபாளையம், சின்னக்கவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம். வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் நாளை (அக்.26) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மின்விநியோகம் இருக்காது என்று சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.