ட்ரெண்டிங்

ஆயுதபூஜை- சேலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு!

 

சேலம் மாநகரில் உள்ள புகழ்பெற்ற வ.உ.சி. சூப்பர் மார்க்கெட்டுக்கு வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, மேட்டூர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது.

 

இந்த நிலையில், ஆயுதப்பூஜை பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று (அக்.20) காலை நிலவரப்படி, சம்பங்கி மற்றும் சாதா சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும், மல்லி பூ கிலோ 700 ரூபாய்க்கும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், ஜாதிமல்லி கிலோ 280 ரூபாய்க்கும், காக்கட்டான் கிலோ 400 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் கிலோ 320 ரூபாய்க்கும், மலைக்காட்டான் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அரளி கிலோ 400 ரூபாய்க்கும், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, செவ்வரளி, ஐ.செவ்வரளி தலா கிலோ 440 ரூபாய்க்கும், நந்தியாவட்டம் கிலோ 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

பூக்களின் விலை உயர்வால், விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக கூறும் வியாபாரிகள், வரும் நாட்களில் பூக்களின் விற்பனை களைகட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.