ட்ரெண்டிங்

கோவை- வாரணாசி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

கோவை- வாரணாசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை- வாரணாசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. டிசம்பர் 25- ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 27- ஆம் தேதி அதிகாலை வாரணாசியைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், டிசம்பர் 30- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.20 மணிக்கு வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 30- ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், விஜயவாடா, வாராங்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.