ட்ரெண்டிங்

கிறிஸ்துமஸ் பண்டிகை- சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக மைசூரு- கொச்சுவேலி- மைசூரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மைசூரு- கொச்சுவேலி இடையே இருமார்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இன்று (டிச.23) இரவு 09.40 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 07.00 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், டிச.24- ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில், மறுநாள் இரவு 07.00 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் மாண்டியா, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கு பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.