ட்ரெண்டிங்

சபரிமலை சீசன்- சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சபரிமலை சீசனைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாகச் செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை சீசனைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர்- கொல்லம் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 22, 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், டிசம்பர் 23, 25 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.