ட்ரெண்டிங்

மலை கிராமத்துக்கு டிரான்ஸ்பார்மரை மக்கள் தலையில் சுமந்து சென்ற சம்பவம்

தமிழகத்தில் மலை கிராமத்துக்கு டிரான்ஸ்பார்மரை மக்கள் தலையில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 மலை கிராமங்ளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கீழூரில் மின் வசதி செய்து தரப்பட்டது. இந்நிலையில், கீழூரில் இயங்கி வந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. மலைப்பகுதியில் கரடு முரடான பாதையில் டிரான்ஸ்பார்மரை கொண்டு செல்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் நேற்று அப்பகுதி மலைவாழ் மக்கள் தங்களது தோளில் சுமந்து சென்றனர்.