சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நடந்த மாட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சுமார் 2,000 கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன. கறவை மாடுகள் 45,000 ரூபாய் முதல் 65,000 ரூபாய் வரையும், எருமைகள் 70,000 ரூபாய் வரையும், இளம் கன்றுகள் 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையும் விற்பனையாகின.
கால்நடைகளின் விலை தற்போது சற்று உயர்ந்துள்ளதால், விற்பனைக் குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.