ட்ரெண்டிங்

சாலைப் பணியைத் தடுத்தி நிறுத்தி குடும்பத்தினர் போராட்டம்!

 

ஓமலூர் அருகே பட்டா நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, நில உரிமையாளர் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசமரத் தெருவில் ராஜசேகர் என்பவரது நிலத்தில் சாலை அமைப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் தனது குடும்பத்துடன், சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, சாலையில் அமர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.