ஆன்மிகம்

சோளக்காட்டில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த கிராம மக்கள்!

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. விவசாயியான இவரது விவசாய நிலத்தில் சோளத்தட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, இவரது சோளக்காட்டில் புகுந்தது தெரிய வந்தது. 

 

மலைப்பாம்புவைக் கண்ட கிராம மக்கள் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் கட்டி மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக எடுத்துச் சென்று தமிழகம்- கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றனர்.

 

உயிருடன் மலைப்பாம்புவைப் பிடித்த மக்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.