ட்ரெண்டிங்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்த பா.ம.க.வினர்! 

அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்த பா.ம.க.வினர்! 

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து, மேட்டூர் அருகே நடைபெற்ற சாலை மறியலின் போது, அரசுப் பேருந்தின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.க்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். 

அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில், பேருந்து நிலையம் முன்பாக திரண்ட கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பா.ம.க.வினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அழைத்துச் செல்வதற்காக கொண்டு வரப்பட்ட அரசுப் பேருந்தின் மீது கல்வீசியதில், முன்பக்க கண்ணாடி உடைந்தது.