ட்ரெண்டிங்

குடிநீர் விநியோகிப்பாளரின் அலட்சியத்தால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே குடிநீர் விநியோகிப்பாளரின் அலட்சியத்தால் பல ஆயிரம் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வீணாகி வருகிறது.

 

பெரியேறிபட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தனித்தனியாக குடிநீர் இணைப்புக் கொடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் உள்ளோர் அலட்சியத்துடன் தரை மட்டத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரை நிரப்புவதற்காக மோட்டரைப் போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

 

அப்போது, தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்து தினமும், ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், "இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.