தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில்
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
தீபாவளி திரு நாளையொட்டி, பொதுமக்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சேலம் மாநகரில் அமைந்துள்ள கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில், சின்னக் கடைவீதியில் உள்ள சின்னக் கடை மாரியம்மன் கோயில், பட்டைக்கோவில் ஆஞ்சநேயர் கோயில், ராஜகணபதி கோயில், சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை அருள்மிகு அழகிரிநாதர் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டும், அலங்காரம் செய்யப்பட்டும், மஹா தீபாராதனைக் காட்டப்பட்டது.
அனைத்து கோயில்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.