ட்ரெண்டிங்

போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது மில் நிர்வாகம் தாக்குதல்!

 

சேலம் மாவட்டம், ஆர்.சி.செட்டிப்பட்டியில் போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்தி ஊழியர்கள் மீது தனியார் நூல் மில் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

 

ஆர்.சி.செட்டிப்பட்டியில் இயங்கும் வரும் தனியார் நூல் மில் நிர்வாகத்திடம், ஊழியர் ஒருவர் தீபாவளி போனஸ் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, சம்மந்தப்பட்ட ஊழியரை தனியார் நூல் மில் நிர்வாகம், பணியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது கூலி ஆட்களை ஏவி, மில் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதில் காயமடைந்த 5 பேர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ள, தனியார் நூல் மில் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.