ட்ரெண்டிங்

சயனைடு கலந்த மதுவை அருந்திய நபர் உயிரிழப்பு! 

சேலம் மாவட்டம், முள்ளுவாடி கேட் பகுதியில் வசித்து வருபவர் ஜசீர் உசேன். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மதுபானத்தை வாங்கி சயனைடு கலந்துள்ளார். பின்னர் அதனை குடிக்காமல் தனது வீட்டில் உள்ள பீரோவின் அடியில் யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (பிப்.24) இரவு பீரோவின் அடியில் இருந்து மதுபாட்டிலைக் கண்டெடுத்த அவரது சகோதரரான சதாம் உசேன், சயனைடு கலந்திருப்பது தெரியாமல் தனது நண்பர் ஹசேன் உடன் சேர்ந்து அருந்தியுள்ளார். 

அப்போது இருவரும் மயங்கி விழுந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஹசேன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக, சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.