ட்ரெண்டிங்

எம்.எஸ்.சுவாமிநாதன் பாரத ரத்னா விருது அறிவிப்பு!

 

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகத்தைச் சேர்ந்த பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் 1996- ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9ஆவது பிரதமராகப் பதவி வகித்தவர் நரசிம்மராவ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மராவ் அம்மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதேபோல், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சரண் சிங், இந்தியாவின் குறுகிய கால பிரதமராக இருந்துள்ளார்.