ஆன்மிகம்

குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் செய்து வைத்த பெற்றோர்!

 

விஜயதசமி அன்று கல்வியைத் தொடங்கினால், அது வாழ்க்கைகு ஒளியூட்டும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், விஜயதசமி தினமான இன்று (அக்.24) சேலம் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வித்யாரம்பம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

இரண்டு முதல் ஐந்து வரை வயதிலான குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் முன்னிலையில் தட்டில் நெல் மணிகள் மற்றும் அரிசி நவதானியங்கள் உள்ளிட்டவைப் பரப்பி, அதில் விரல் பிடித்து எழுதிக் காண்பித்தனர். முன்னதாக, குழந்தையுடன் கோயிலுக்கு சென்ற பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேண்டி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 

இந்த சிறப்பு வாய்ந்த நாளில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளிலும், அரசு தொடக்கப் பள்ளிகளிலும், ஆரம்பக் கல்விக்கான சேர்க்கை நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். இதையடுத்து, இன்றே வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது