ட்ரெண்டிங்

மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பயனாளிகளுக்கு குட் நியூஸ்!

அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையை வரும் அக்டோபர் 14- ஆம் தேதியே வங்கிகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் 15- ஆம் தேதி வங்கிகளில் பொதுமக்களுக்கு பணம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், இந்த மாதம் 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14- ஆம் தேதி வங்கிகளில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.