ட்ரெண்டிங்

மேட்டூர் காவிரி கால்வாய் கரையோரம் பற்றி எரிந்த தீ!

மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயில் தொடர்ந்து, தீ வைத்து வரும் அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து பூலாம்பட்டி செல்லும் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாய் கரையோரம், அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், விரைந்துச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.

 

காவிரி கால்வாய் கரையோரம் ரசாயனக் கழிவுகள் கொட்டப்படும் நிலையில், இது போன்ற தீ விபத்துகளால், அதில் இருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக செல்வோர் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

சுவாச கோளாறு, மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளைத் தொடர்ச்சியாக, மக்கள் சந்தித்து வருவதால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை காவல்துறையினர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.