ட்ரெண்டிங்

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு- சேலத்தில் இருந்து ஓசூர் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா அரசுக்கு பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகா மாநிலம் முழுவதும் நாளை (செப்.29) பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள் அனைத்தும், நாளை (செப்.28) ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், தமிழகம்- கர்நாடகா எல்லைகளில் நிலவும் சூழலைப் பொறுத்தே பேருந்து சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, சேலத்தில் இருந்து செல்லும் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், மேட்டூர் வழியாக இயக்கப்படும் பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.