மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 38 அடியாக அதிகரித்துள்ளது.
இன்று (செப்.27) காலை 08.00 மணி நிலவரப்படி, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,943 கனஅடியில் இருந்து 7,231 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக, அணையில் இருந்து அணைமின் நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரும், கீழ்மட்ட 5 கண் மதகு வழியாக வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் என மொத்தமாக வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.91 அடியில் இருந்து 38.02 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர் இருப்பு 11.09 டி.எம்.சி.யாக உள்ளது.s