ட்ரெண்டிங்

தனியார் பேருந்து மோதியதில் கோயில் பூசாரி உயிரிழப்பு- ஓட்டுநரை கைது செய்து காவல்துறை விசாரண

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தனியார் பேருந்து மோதியதில் பூசாரி உயிரிழந்த நிலையில், நடத்துநரும், ஓட்டுநரும் தப்பியோடும் சிசிடிவு காட்சி வெளியாகியுள்ளது.

 

சங்ககிரி வட்டம், வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து, சாலையின் ஓரமாக சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கோயில் பூசாரி குமரேசன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் ஓட்டுநரும், நடத்துநரும், பேருந்தை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு, சாலையில் ஓட்டியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தினர்.

 

இதையடுத்து, பேருந்து ஓட்டுநரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.