ட்ரெண்டிங்

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்த ஆட்சியர்!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மோடிக்காடு என்ற இடத்தில் அதிக பாரத்துடன், வேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தி, நிற்காமல் சென்ற வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., மடக்கிப் பிடித்து, அவர்களை அறிவுறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். 

 

வாகன விபத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். 

 

சேலம் மாவட்ட ஆட்சியரின் செயல் மருத்துவமனையில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது