ட்ரெண்டிங்

மதுபோதையில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்.... சரமாரியாக அடித்த பொதுமக்கள்!

 

சேலம் மாநகரம், அன்னதானப்பட்டியில் உள்ள மூணாம்கரடு பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் கௌரி சங்கர் (வயது 22). இவர் மதுபோதையில் முள்ளுவாடி கேட் அருகே சாலையில் சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்ததோடு, அவ்வழியே சென்ற இரு பெண்களிடம் கௌரி சங்கர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது செய்வதறியாது தவித்த பெண்கள் கூச்சலிட்டதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கௌரி சங்கரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கி, சேலம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து, பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த கௌரி சங்கரை காவல்துறையினர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.