ட்ரெண்டிங்

சேலத்தில் அதிகாலை நிகழ்ந்த சோகம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலி சங்ககிரி போலீசார்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை இவருக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகளான பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இதில் இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. பிரியாவிற்கும் ராஜதுரைக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததால் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் பகுதியைச் சேர்ந்த பிரியாவின் பெற்றோரான பழனிச்சாமி பாப்பாத்தி மற்றும் அவரது உறவினர்கள் எட்டு பேர் கொண்டலாம்பட்டி வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படாததால் தனது மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறி இன்று அதிகாலை ஆம்னி வேனில்  8 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்றனர் அப்பொழுது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்னா கவுண்டனூர் என்னும் பகுதியில் உள்ள சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்ணி வேன் மோதியது இதில் ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகியோர்  பலத்த காயமடைந்தனர் மேலும் வாகனத்தில் பயணம் செய்த 1.செல்வராஜ் 2.மஞ்சுளா 3.ஆறுமுகம் 4.பழனிசாமி 5.பாப்பாத்தி  மற்றும் ஒரு வயது குழந்தை 6.சஞ்சனா உள்ளிட்ட  6 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்து ஏற்படுத்தி சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்